கடலூர்,டிச.20- புதிய சுகாதார ஆய்வா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சுகா தாரம் மற்றும் துப்புரவு ஆய்வாளர் நல சங்கத்தின் சார்பில் கடலூர் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் பிரகலாதன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தை அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எல்.அரிகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில் மாநில பொதுச் செய லாளர் எஸ்.சிவகுரு, சுகா தார ஆய்வாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.அன்பரசு, மாநிலத் தலைவர் பிரவின் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் நவீன் பாலா, மாவட்டத் தலைவர் முத்துச்செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 5 ஆயிரம் புதிய சுகா தார ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 2,715 சுகாதார ஆய்வாளர் நிலை இரண்டை நிரந்தர பணி யிடங்களுக்கான ஒப்புதல் அளிக்க வேண்டும், கொ ரோனா காலத்தில் பணி யாற்றி மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணி கிடைக்காத சுகாதார ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தினர்.