districts

img

அரசு மருத்துவமனையில் 2 மாதமாக சம்பளம் இல்லை: மருத்துவர்கள்,ஊழியர்கள் போராட்டம்

சிதம்பரம், மார்ச் 4- சிதம்பரத்திலுள்ள கடலூர் மாவட்ட ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிதம்பரத்தில் உள்ளது. இங்கு மருத்து வர்கள், மருத்துவ பேராசிரியர்கள், மருத்து வம் இல்லாத ஊழியர்கள் என 1800 க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வரு கிறார்கள். இவர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்களுக்கான ஊதியம் இதுவரைக்கும் வழங்கப்படவில்லை. இத னால், சனிக்கிழமையன்று(பிப்.4) மருத்துவமனை வாயில் முன்பு கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரி யர், ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் மனோகர், பழனிவேல், ரவி, மருத்துவர் பாலாஜி சாமிநாதன், குழந்தை நல மருத்துவர் ராமநாதன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

;