கடலூர், ஏப். 12- கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் நகரத்திற்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். சக்தி நகரில் உள்ள திமுக வார்டு கவுன்சிலருக்கு சொந்தமான வைத்தியலிங்கா என்ற பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் 5 வயது சிறுமி இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் செவ்வாய்கிழமை பள்ளிக்குச் சென்று விட்டு, வீடு திரும்பிய, சிறுமியின் பிறப்புறுப்பில் அதிகளவு ரத்தம் கசிந்ததால், வலியால் துடித்த சிறுமி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஔமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாச்சலம் மகளிர் காவல்துறையினர், அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, சிறுமி, பள்ளியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டி ருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் ஆசிரியர் கள் மற்றும் பள்ளியின் தாளார் பக்கிரிசாமியை, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளியின் உரிமையாளரும், கவுன்சிலரு மான பக்கிரிசாமி சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.