districts

img

காந்தியடிகள் நினைவு தினம் கடலூரில் திறந்தவெளி கருத்தரங்கம்

கடலூர்,ஜன.31- தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினத்தில் மதவெறிக்கு எதிராகவும் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது.  இந்த கருத்தரங்கத்திற்கு மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஆர். அமர்நாத் தலைமை தாங்கினார். குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின்  தலைவர் பி.வெங்கடேசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.  வி.சி.க பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ,  இள.புகழேந்தி(திமுக), ஏ.எஸ். சந்திரசேகரன்,  திலகர்(காங்கிரஸ்), கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன்,  வி.குளோப் (சிபிஐ), வி.எம். ஷேக் தாகூத்(தமுமுக), எம்.மருதவாணன் (குடியிருப்போர் நலசங்கம்),எழிலேந்தி(திக), மூர்த்தி (மக்கள் நீதி மையம்), பாஸ்டர் ஜெயக்குமார், எஸ்.என்.கே. ரவி(பொது நல இயக்கங்களில் கூட்டமைப்பு) ஆகியோர் கருத்துரையாற்றினர். இந்த நிகழ்ச்சியை தமுஎகச மாவட்ட செயலாளர் கவிஞர் பால்கி ஒருங்கிணைத்தார். ரஹீம்(மமக) நன்றி கூறினார்.