districts

img

சிறுப்பாக்கத்தில் படம் திறப்பு தலைவர்கள் பங்கேற்பு

கடலூர், ஜன. 16- சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தியின் தந்தை கோ.ராமையாவின் படத்திறப்பு நிகழ்ச்சி சிறுபாக்கம் கிராமத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வி.கணேசன், விடு தலை சிறுத்தைகள் கட்சித் தலை வர் தொல்.திருமாவளவன், திராவி டர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ராமை யாவின் படத்தை கே.பால கிருஷ்ணன் திறந்து வைத்தார். தொல.திருமாவளவன் எம்.பி நூலை வெளியிட அமைச்சர் கணேசன் பெற்றுக்கொண்டார். ராமையாவின் வாழ்க்கை பற்றிய குறும்படத்தை கொளத்தூர் மணி துவக்கி வைத்தார்.  கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சிவக்குமார், சென்னை உயர்நீதி மன்ற பார் கவுன்சில் உறுப்பினர் எம்.வேல்முருகன், விசிக  துணைப் பொதுச் செயலாளர்கள் வன்னி அரசு, ரஜினிகாந்த், திராவிட விடு தலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசிக் குமரன், திமுக ஒன்றிய செயலாள ர்கள் சின்னசாமி, செங்குட்டுவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ராமையா குடும் பத்தின் சார்பில் வழக்கறிஞர் திரு மூர்த்தி நன்றி கூறினார்.