சிதம்பரம், நவ.23- நீண்ட காலமாக தீர்க்கப்பட மால் உள்ள கோரிக்கைகளுக் காக உண்ணாநிலை, பொதுக்கூட்டம், பேரணி, காலவரையற்ற வேலை நிறுத்தம் என்று தொடர் போராட்டங்களை நடத்த தாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்) முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப் பாளர் சிவகுருநாதன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:- அண்ணாமலை பல்கலைக் கழக நிர்வாகத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அரசு ஏற்று 10 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் ஆசிரி யர்கள், ஊழியர்கள், ஓய்வூ தியர்களுக்கு வழங்க வேண்டிய நியாயமான சலுகை களை முற்றிலுமாக நிறுத்தி வைத்துள்ளது. பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தொகுப்பூதி யர் மற்றும் தினக்கூலி ஊழி யர்கள் இதுவரைக்கும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. ஓய்வூதியர்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பணப்பயன்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 4 கட்டமாக போராட்டத்தை நடத்தி விட்டோம். ஆனாலும், எங்களது நியாயமான கோரிக்கைகள் தீர்க்கப்படவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறோம். எனவே, நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் கோரிக்கைகள் அடங்கிய கருப்பு அட்டை அணிந்து பணி யாற்றுவது என்று முடிவு செய்தி ருக்கிறோம்.
டிசம்பர் 7 அன்று மாலை மனித சங்கிலி இயக்கமும் டிச.14 அன்று பொதுக்கூட்டமும் டிச. 28 அன்று பேரணியாக சென்று சிதம்பரம் உதவி ஆட்சி யரை சந்தித்து மனு அளிப்பது என்றும் ஜனவரி 23 ஆம் தேதி அனைத்து கட்சி கள் மற்றும் அனைத்து தொழிற் சங்க தலைவர்களை ஒருங்கி ணைந்து உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்து வது எனவும் தீர்மானித்திருக்கி றோம். அப்போதும் எங்க ளது கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை என்றால் ஜனவரி 30 அன்றுகாலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரி வித்தார். கூட்டமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.மனோகரன், ஏ.ஜி.மனோகர், ஏ.ரவி, பேராசிரியர்கள் இளங்கோ, பாஸ்கர், பல்கலை கழக ஊழியர் சங்க பொதுச் செய லாளர் பழனிவேல் உள்ளிட் டோர் பேட்டியின் போது உடனிருந்தனர்.