சிதம்பரம், பிப்.13- வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான ஏராளமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக வாரியத்தின் தலைவர் அப்துல் ரகுமான் கூறியுள்ளார். சிதம்பரத்தில் அனைத்து ஜமாத் கூட்ட மைப்பு சார்பில் நடைபெற்ற ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், வக்ஃபு வாரிய சொத்துக்கள் இரண்டு வகை களில் கைவிட்டு போகிறது. ஒன்று ஆக்கிரமிப்பு, இன்னொன்று அப கரிப்பு. நிலத்தை விற்பவரோ வாங்கு வோரோ சார் பதிவாளர் அலுவ லகத்துக்கு போக வேண்டியது இல்லை என்கிற காலகட்டத்தில். போலி யான ஆவணங்களை உருவாக்கி ஒருவரிட மிருந்து மற்றொருவர் என அடுத்தடுத்து பலருக்கு விற்கப்பட்டுள்ளது. நான் பொறுப்புக்கு வந்த பிறகு அரசு நிலஅளவு துறை மூலமாக, பதிவு செய்யப்பட்ட அத்தனை புல எண்களையும், சர்வே எண்களையும் பட்டியலிட்டு அந்தந்த பகுதியில் இருக்க கூடிய சார் பதிவாளர் அலு வலகத்திற்கு அனுப்பி, இந்த சர்வே எண்களில் இதுநாள் வரை என்னென்ன சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டது, வாங்கப்பட்டது என்றும் கோரியுள்ளோம். இனிமேல் எந்த விற்பனையும் வக்ஃபு வாரிய புல எண்களில் ஆவணங்களில் பதிவு செய்யக் கூடாது என என்று உத்தரவிட்டுள்ளோம். இதன் மூலம் போலி பத்திர பதிவு செய்வதை இதன் மூலம் தடுத்து இருக்கிறோம். வக்ஃபு வாரிய சொத்துக்கள் யாருக்கும் விற்பனை செய்ய முடியாது. இதில் அரசியல் குறுக்கீடு இருக்காது என முதல்வர் கூறியுள்ளார். வாரியம் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களையும் அப கரிக்கப்பட்ட இடங்களையும் மீட்டுக் கொண்டு வந்து, பொது மக்களுடைய பயன்பாட்டிற்கு தரவேண்டும் என கூறி யுள்ளார். வக்ஃபு வாரிய நிலங்களை கல்வி நிறுவனங்களாகவும், மருத்துவ மனைகளாகவும், பயன்படுத்துவதற்கு முன் வாருங்கள் என்று எல்லா இடங்களிலும் சொல்லி வருகிறோம் என்றார் அவர். இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன், ஜமாத் நிர்வாகிகள் ஜாகீர்உசேன், ஹலீம், முகமது ஜியாவுதீன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத்துணைத்தலைவர் மூசா, நகரமன்ற உறுப்பினர் தில்லை ஆர்.மக்கீன், தொழிலதிபர் எஸ்.ஆர்.ராம நாதன், மூத்த மருத்துவர் ஆர்.முத்துக் குமரன், மருத்துவர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.