districts

img

தொகுப்பூதிய ஊழியர்கள் போராட்டம்

சிதம்பரம், செப்.19- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  12 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் 170 பேர் பணியாற்றி வருகின்றனர். தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பலகட்டமாக போராடி வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் படங்களை கையில் ஏந்திக் கொண்டும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் ஊழியர்கள் திங்களன்று (செப். 19) பல்கலைக்கழக வளாகத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுதது, துணை வேந்தர் ராம.கதிரேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கையை தமிழக அரசுக்கு தெரிவிப்பதாகவும், தற்போது பணியை நீட்டிப்பு வழங்க கூடுதல் அவகாசம் மட்டுமே பெற முடியும்” என்றார். இதனால், அடுத்த கட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.