districts

img

தொகுப்பூதிய ஊழியர்கள் தொடர் தர்ணா நடத்த முடிவு

சிதம்பரம், மார்ச் 13-‘ சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 205 தொகுப்பு ஊதிய ஊழியர்கள் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி வரு கின்றனர்.  இவர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டங்களில் பல்கலைக்கழக வளாகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து  பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்தில் 70க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் குறித்து சரியான பதிலை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்காததால் தினம் அலுவலக நேரத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக  அவர்கள் அறிவித்துள்ளனர்.