districts

img

மருத்துவர்கள் பற்றாக்குறையால் அலைகழிக்கப்படும் நோயாளிகள்

கடலூர்,செப்.19-  கடலூர் மாவடடம் விருத்தாசலம் வட்ட அரசு மருத்துவமனைக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்லக் கூடிய நிலையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அலைகழிக்கப்படுகின்றனர். மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டி நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்தவேண்டும், நோயாளி கள் உடன் வரும் உறவினர்கள் தங்கு வதற்கு தங்கும் அறை அமைக்க வேண்டும், வாகனங்களை நிறுத்துவதற்கு  பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும், மருத்துவமனையை சுற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும், மருந்து மாத்திரை களை தனியார் மருந்துக் கடைகளில் வாங்கிவர கட்டாயப்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வீரமணி, சிபிஎம் கிளைச் செயலாளர் கர்ணன் ஆகியோர் பேசினர். இதற்கிடையே மருத்துவமனையின் தலைமை மருத்துவர் எழில், கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாகக் கூறியுள்ளார்.

;