ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக பல மொழிகள் பேசும் நாட்டில் சமஸ்கிருதம், இந்தி மொழிகளில் குற்றவியல் சட்டங்களுக்கு பெயர் வைத்ததை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர் எம்.ஜோதிலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், ஜெ.ராஜேஷ் கண்ணன், மாநகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், ஒன்றியச் செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம், சிப்காட் செயலாளர் எம்.சிவானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.ஆளவந்தார், எஸ்.கே.பகிரான், வழக்கறிஞர்கள் எம்.ஜே.லெனின், கே.சுரேஷ் குமார் ஆகியோர் பேசினர்.