districts

img

கம்மாபுரத்திற்கு குடிநீர் வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்

கடலூர்,ஏப்.3- கம்மாபுர ஊராட்சிமன்றம் மேலகுளம் தெருவில் சுமார் 55 குடும்பங்கள் வசிக்கின்றன.  குடிநீருக்காக வெகு தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலை உள்ளது. எனவே பெரிய நீர்த்தேக்க தொட்டி,  பைப் லைன் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும். சாலைப் பணியை உடனடியாக முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகர ஒருங்கி ணைப்பாளர் ஆர்.கலைச் செல்வன் தலைமையில் விருத்தா சலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பி னர் டி.ரவீந்திரன், கே.எம். ஜெ. சின்னத்தம்பி, நெல்சன், விவ சாயத் தொழி லாளர் சங்க துணைத் தலைவர் பி.வீரமணி, செந்தில், சத்யா, கவிதா, கம்மாபுரம் கிளை செயலாளர் அன்பழகன், சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கோட்டாட்சியர் மற்றும் உதவி திட்ட இயக்குநரிடம்  மனு அளித்த னர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தனர்.