districts

ஓராண்டில் கடலூர் மாவட்ட வளர்ச்சி: ஆட்சியர் பேட்டி

கடலூர், மே.8- கடலூர் மாவட்ட ஓராண்டு வளர்ச்சி குறித்து ஆட்சியர் பாலசுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 19 ஆயிரத்து 116 மனுக்களில் 8 ஆயிரத்து 953 மனுக்களுக்கு ரூபாய் 42 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முதல்வரின் முகவரி திட்டத்தின் 50 ஆயிரத்து 122 மனுவில் 43 ஆயிரத்து 30 மனுகள் மீது தீர்வு காணப்பட்டது. உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 113 பேருக்கு ரூபாய 5.6 கோடி வழங்கப்பட்டு உள்ளது. பட்டா மாற்றம் 56 ஆயிரத்து 853 நடைபெற்றுள்ளது. ஆன் லைன் மூலம் 4 லட்சத்து 14 ஆயிரத்து 575 சான்றிதழ்கள் வழங்கப்படுள்ளது. ரூ.180 கோடியில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 296 முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள், தகுதி இல்லாத 11 ஆயிரத்து 49 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீர்நிலை புறப்போக்கு 979 ஆக்கிரமிப்பில் 90 அகற்றப்பட்டு 190 ஹெக்டேர் மீட்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை மூலம் 307 கிலோ மீட்டர் சாலைகள் ரூபாய் 203 கோடியிலும், 60 சிறு மற்றும் பாலங்கள் ரூபாய் 32.89 கோடியும் செலவிடப்படுகிறது. 25 ஆயிரம் வீடுகள் மாவட்டம் முழுவதும் கட்டித் தரப்படும். திங்கள் கிழமை தோறும் சுமார் 450 மனுக்களில் 65 முதல் 70 விழுக்காடு வரை உண்மையான மனுக்கள் தீர்க்கப்படு கிறது. ரூபாய் 42 கோடிக்கான மழை வடிகால் திட்டம் 80 விழுக்காடு முடிவுற்று மழை வருவதற்குள் நிறைவேற்ற முடுக்கி விடப்பட்டுள்ளது. கடலூர் பேருந்து நிலையத்திற்கும், குப்பை கொட்டுவதற்கும் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்