districts

img

மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன் மேளா

கடலூர், ஜுன் 11- கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி யின் மூலம் 2024-25-ம் ஆண்டிற்கான கடன் வழங்கும் லோன் மேளா கடலூரில் செவ்வாயன்று நடைபெற்றது.

மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதி வாளர் திலீப் குமார் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையக கிளை, புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், செம்மண்ட லம், கூத்தப்பாக்கம், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி ஆகிய 9 கிளைகளின் எல்லைக்குட்பட்ட பொது மக்களுக்கு அரசு திட்டம் சார்ந்த கடன் மற்றும் விவசாயம் சார்ந்த கடன், விவசாயம் சார்பற்ற கடன் வழங்கப்பட்டது.
இதில் உதவி பொது மேலாளர்கள் செந்தமிழ்ச் செல்வி, பல ராமன், அருள், இளங்கோ, மலர்விழி மற்றும் வங்கிப் பணியாளர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.