districts

img

சிபிஎம் போராட்ட அறிவிப்பு எதிரொலி அதிகாரிகள் அமைதி பேச்சு: கோரிக்கைகள் ஏற்பு

சிதம்பரம், டிச 12- புவனகிரி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வரி, சொத்து, திடக்கழிவு வரிகளை உயர்த்தியதை திரும்பப் பெற வலியுறுத்தியும் தெரு விளக்குகள், கழிவு நீர் கால்வாய் அமைக்கக் கோரியும்  கீழ் புவனகிரி பகுதிக்கு சுடுகாட்டுப் பாதை அமைத்து கொடுக்க வேண்டியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புவனகிரி வட்டாட்சி யர் ரம்யா தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது.பேரூராட்சி அலுவலர்கள்,  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின், ஒன்றியக் குழு உறுப்பினர் சதானந்தம், நகரச் செயலாளர் மணவாளன் ஆகியோர் கலந்துகொண்டனர். கீழ் புவனகிரியில் தனியார் நிலம் விலைக்கு வாங்கி சுடுகாட்டு பாதை அமைத்து கொடுக்கப்படும் என்றும் தெரு விளக்கு உள்ளிட்ட பிற கோரிக்கைகள்  படிப்படி யாக நிறைவேற்றி கொடுப்பதாக உறுதியளித்த னர். இதனையடுத்து, போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.