கடலூர், ஜூன்10 - கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 40). தச்சுத் தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகில் மரப்பட்டறை வைக்க புதிதாக செட் அமைத்துள்ளார். இதற்கு சொத்து வரி நிர்ணயம் செய்யக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் செல்வம் விண்ணப்பித்தார்.
அப்போது மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் (வயது 55), வருவாய் உதவியாளர் லட்சுமணன் (45) ஆகியோர் சொத்து வரி நிர்ணயம் செய்ய வேண்டுமானால் தங்களுக்கு ரூ.50ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக கடலூர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு செல்வம் புகார் அளித்தார்.
அதன் பெயரில் ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை வெள்ளி யன்று எடுத்துச் சென்ற செல்வம் கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு இருந்த பாஸ்கரன் மற்றும் லட்சு மணன் ஆகியோரிடம் வழங்கினார். அங்கு மறைந்திருந்தால் லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் போலீசார் 2 பேரையும் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் வருவாய் உதவியாளர் லட்சுமணன் ஆகிய இரண்டு பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து திங்களன்று உத்தரவிட்டுள்ளார்.