கடலூர், நவ.11- வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி யால், கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிறப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கடல் சீற்றம்
கடலூரில் தேவனாம்பட்டினம், முதுநகர், தாழங்குடா, நாணமேடு, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றத்தால் கிராமத்திற்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. விசைப்படகுகளை மீனவர்கள் பாது காப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். கடற்கரை கிராமங்கள் ஓரம் பைபர் படகுகள் நிறுத்தி வைப்பது வழக்கம். வெள்ளிக்கிழமை காலை முதல் மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை டிராக்டர் மூலம் இழுத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வருகின்றனர். கடலூரில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலூர் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன் வளத்துறை அதிகாரிகள் கடந்த 9ஆம் தேதி எச்சரித்திருந்தனர். அதன்படி, கடலூர் மீனவ கிராமங் களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 3 நாட்களாக மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
குடியிருப்புக்குள் மழை நீர்
தொடர் மழையால் கடலூர் மாநகராட்சியின் தாழ்வான பகுதி யில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழந்துள்ளது. பாரதி சாலை யில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு மழை செல்ல வழியின்றி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் அதி காரிகள் சாலையை வெட்டி மழை நீரை வெளியேற்றினர். கடலூரை சுற்றி யுள்ள பாதிரிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி யுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடு முறை அளித்திருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 98.6 மி.மீ மழை பதிவானது.