districts

நுகர் பொருள் வாணிபக் கழக பருவ கால ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்,மார்ச்.3 - நெல் கொள்முதல் நிலைய பருவக் கால ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கடலூர் செம்மண்டலத்திலுள்ள மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாணிபக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட ரூ. 4 ஆயி ரம் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதி படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், டிஎன்சிஎஸ்சி நிர்வாகத்தில் கூட்டு றவுத்துறை அலுவலர்களை கொண்டு பணியிடங்களை நிரப்புவதைவதையும், ரேசன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஆர்.முரளி தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.சண்முகம், சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், செயலாளர் டி.பழனிவேல், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.பாபு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் சங்க பொரு ளாளர் ச.கலைவாணன், நிர்வாகி கள் சுதர்சன் பாபு, செந்தில் குமார், ஸ்டாலின், வாசுதேவன், தினகரன், ராஜமுருகன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.