கடலூர், ஜூன் 11- கந்து வட்டி புகார் தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் உள்பட 5 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் கந்து வட்டி கொடுமையால் காவலர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், கந்து வட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைவர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதி புரத்தைச் சேர்ந்தவர் இம்ரான்கான் (46), இவர் வடலூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சமுட்டிக் குப்பத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஏ.கே.எஸ்.சுப்பிரமணியன், ஆபத்தானபுரம் சேராகுப்பம் முருகன் ஆகியோர் கந்து வட்டி கேட்டு மிரட்டி வருவதாக தெரி வித்திருந்தார். மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு இவர்களிடம் ரூ. 1 லட்சம் கடனாக பெற்றதில் நாளொன்றுக்கு ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.2 கோடி வரையில் கடன் தொகையை செலுத்தி விட்டேன். ஆனாலும், மேலும், ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டி வரு கின்றனர். இதனால், உயிருக்கு பயந்து வெளியூரில் தங்கி யிருந்தேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் முதல் வழக்காக அதிமுக பிரமுகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேப்போன்று, மாவட்டம் முழுவதும் 5 கந்து வட்டி வழக்குகள் பதி வான நிலையில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில், அதிமுக பிரமுகர் ஏ.கே.சுப்பிர மணியனுக்கு சொந்தமாக கடலூர் வண்டிப்பாளையத்தில் உள்ள அவரது வட்டிக் கடையில் காவல்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.