கடலூர், பிப். 13- திட்டக்குடி அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே நான்கு பேர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து திங்கட்கிழமை (பிப்.13) அதிகாலை மதிவாணன் (35), அவரது மனைவி கவுசல்யா (32). அவர்க ளின் மகள் சாரா, கவுசல்யாவின் தந்தை துரை (60), தாய் தவமணி (55) ஆகிய ஐந்து பேரும் சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த ஆவட்டி கிராமம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது சென்னை யிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து முன்னே சென்ற காரின் பின்பக்கம் மோதியது. இதில் கட்டுப் பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கார் நொறுங்கியது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த மதிவாணன், கவுசல்யா, தவமணி, குழந்தை சாரா ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். முதிய வர் துரை, பெரம்பலூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை யடுத்து காரில் சிக்கியிருந்த உடல்களை வேப்பூர் தீயணைப்புத் துறையினர் ஒருமணி நேரம் போராடி மீட்டனர். இதுகுறித்து ராமநத்தம் காவல் துறை யினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.