சிதம்பரம், டிச 30- பரங்கிப்பேட்டை அருகே அரிய கோஷ்டி ஊராட்சி மன்றம் குட்டி ஆண்டவர் கோயில் கிராமத்தில் விடுபட்ட 22 பயனாளிகளுக்கு பட்டா வழங்கக் கோரி சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன் மனு கொடுத்தார். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், அரியகோஷ்டி ஊராட்சி, குட்டியாண்டவர் கிரமத்தில் சுனாமி நகரில் சர்வே எண்: 156/6-ல் தனியார் தொண்டு நிறுவனங்களின் மூலம், சுனாமியால் பாதிக்கப்பட்ட 82 பயனாளி களுக்கு வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. இவர்க ளில் 60 பயனாளிகளுக்கு வருவாய் துறையினர் மூலம் ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதில் விடுப்பட்டுள்ள 22 பயனாளிகளுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.