சிதம்பரம், மார்ச் 14- சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழக வேளாண் துறை இறுதி ஆண்டு மாணவர்கள் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச வேளாண் ஆராய்ச்சி, விரிவாக்க மையங்களுக்கு சுற்றுலா மார்ச் 4 ஆம் தேதி முதல் மேற்கொண்டு வரு கின்றனர். உயர்க் கல்வி சுற்றுலா சென்ற மாண வர்களை அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் இராம. கதிரேசன் வாழ்த்தி வழி யனுப்பி வைத்தனர். இந்த சுற்றுலாவின் ஒரு பகுதி யாக ராமோஜி சினிமா நகரத்திற்கு சென்றனர். அங்கு, சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கலை போட்டி களில் கலந்து கொண்ட அண்ணாமலை பல்கலைக் கழக மாணவிகள் குழு விற்கு முதல் பரிசு கிடைத் தது. இந்த பரிசை அண்ணா மலை பல்கலைக்கழகம் சார்பில் உயர் கல்வி சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் முனை வர் தி. ராஜ் பிரவினிடம் வழங்கப்பட்டது.