கடலூர், மார்ச் 16- விவசாய தொழிலா ளர்களுக்கு தனித் துறையை உருவாக்க வேண்டும், விவசாயத் தொழி லாளர்களுக்கு குறைந்த பட்ச சட்ட கூலி கேரளா அரசை போல் 600 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்டப் பொரு ளாளர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன், நிர்வாகிகள் ஆர்.நெடுஞ்சேர லாதன், சி.வெற்றி வீரன், ஏ.பன்னிர் ஆகியோர் பேசினர். அதேபோல் கள்ளக் குறிச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் மாவட் டத் தலைவர் பி.சுப்பிர மணியம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்டச் செயலாளர் இரா.பூமாலை, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், பொருளாளர் பி.பழனி, துணைத் தலை வர்கள் அ.பா.பெரியசாமி. ஏ.கே.முருகன், துணைச் செயலாளர் கே.ஆனந்த ராஜ், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மு.சிவ குமார் ஆகியோர் பேசினர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்டத் தலை வர் வி.அர்ச்சுணன் தலை மையில் நடைபெற்ற ஆர்பபட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் கே.சுந்தர மூர்த்தி, துணைச் செய லாளர் பி.கலியமூர்த்தி ஆகி யோர் பேசினர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.கணபதி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் அ.து. கோதண்டன், மாவட்டச் செயலாளர், மாவட்டச் செயலாளர் கே. கே. வெங்கடேசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர். பாரி, மாவட்ட துணைத் தலைவர் எம். பிரகலாதன், மாவட்டப் பொருளாளர் எஸ். பாலசுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர் அண்ணாமலை, வி. மாணிக் கம், கரும்பு வெட்டும் தொழி லாளர் சங்க நிர்வாகி கே.வி. சொக்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.