districts

அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை: கடலூரில் அவகாசம் வழங்க வலியுறுத்தல்

கடலூர், அக். 14- கடலூர் மாவட்ட அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மேலும் அவ காசம் வழங்கி அனைத்து காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் கடலூர் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன் அண்ணாமலை பல்கலைக் கழக துணை வேந்தருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் நடப்பு கல்வி யாண்டிற்கான (2022-2023) இளங்கலை மற்றும் முது கலை மாணவர் சேர்க்கை கள் நடைபெற்று, 12.10.2022 அன்றுடன் முடி வடைந்துள்ளது. இந்நிலையில் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களில் காணப்படும் காலி இடங்களில் மாண வர்களைச் சேர்க்க முடி யாமல் அந்த இடங்கள் காலியாகவே வைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரி யிலும் சேர்க்கைக்கு விண்ணப்பித்து ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் காத்திருக்கை யில் காலி யிடங்கள் நிரப்பாமல் இருப்பது முறை யாகாது. கூடுதலாக ஒரு வார காலம் காலநீட்டிப்பு வழங்கினால் பல மாண வர்கள் சேர்க்கை பெற்று கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்படும் என்பதைத் தங்க ளின் மேலான கவ னத்திற்குக் கொண்டு வரு கிறேன். எனவே, அண்ணா மலைப் பல்கலைக்கழ கத்தில் இணைப்வுபெற்ற கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குக் கூடுதலாக ஒருவாரம் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.