கடலூர்,மார்ச்.17- விருத்தாசலத்தில் மருமகள் மீது மாமியார் ஆசிட் வீச்சி கொலை செய்ய முயற்சித்த சம்பவத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தா சலம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலிவரதன். இவரது மனைவி ஆண்டாள். அதிமுக நகர துணைச் செயலாள ராக உள்ளார். இவர்களது மகன் முகேஷ் ராஜ் அவிநாசியில் தனி யார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கிருத்திகா (26 ) இரு வருக்கும் கடந்த ஏழு வருடங்க ளுக்கு முன்பு திருமணம் நடந்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. மருமகள் கிருத்திகா வின் நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இந்தநிலையில், மார்ச் 13 ஆம் தேதி இரவு தூங்கிக் கொண்டி ருந்த கிருத்திகாவின் மீது கழிப்பறைகளுக்கு பயன்படுத்தப் படும் ஆசிட்டை முகத்தில் வீசி யுள்ளார். மேலும், கொசு விரட்டி திரவத்தை வாயில் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் காவல் துறைக்கு புகார் கொடுத்துள்ளனர். இதனை யடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆண்டாளை கைது செய்தனர். இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.மல்லிகா,மாவட்டச் செயலாளர் பி.மாதவி, ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இனியும் இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, குற்றவாளி மாமியார் ஆண்டாளுக்கு காவல்துறை கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று தெரி வித்துள்ளனர்.