districts

img

தலித் மக்கள் மீதான பொய் வழக்கு திரும்பபெற தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

கடலூர், ஜன. 30- தலித் மக்கள் மீது போடப் பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலி யுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை முன்னணி யின் தலைவர் ஜே. ராஜேஷ்கண்ணன், மாவட்டச் செயலாளர் ப.வாஞ்சிநாதன் ஆகியோர் தலைமையில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவின் விவரம் வருமாறு:- விருத்தாசலம் வட்டம், சாத்துக்குடல் மேல்பாதி கிராமத்தைச் சார்ந்த ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த அரிகிருஷ்ணன், அறிவுடை நம்பி, பாலமுருகன், சிவ  சங்கரன் ஆகியோர் ஜன. 17அன்று சாத்துக்குடல் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்காக பரிசுப் பொருட்கள் வாங்கு வதற்காக விருத்தாசலம் நோக்கி ஆலிச்சிக்குடி கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தினர். அப்போது, ஆலிச்சிகுடி பேருந்து நிறுத்தம் அருகே மாற்று சமூகத்தைச் சேர்ந்த சடையன் (எ) பரமசிவன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் வழி மறித்து சாதிப் பெயரை இழிவாக சொல்லியதுடன் ஆயு தங்களுடன் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாய மடைந்த 4 பேரும் விருதாச்சலம் அரசு மருத்துவமனையிலும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.  இந்நிலையில் தலித் தரப்பினர் 14 பேர் மீது கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அந்த வழக்கில் அரிகிருஷ்ணன் என்பவரின் தந்தை கோதண்டம் இறந்து 2 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் அவரையும் அந்த வழக்கில் காவல்துறை சேர்த்துள்ளது. இதன் மூலம் முழுக்க முழுக்க பொய் வழக்காக ஜோடிக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வில்லை. உரிய விசார ணையை வருவாய் மற்றும் காவல்துறை நடத்த வில்லை. எனவே, உரிய விசா ரணை நடத்தி தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்ற வாளிகள் அனைவரை யும் கைது செய்ய வேண்டும், தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெறவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது. பொருளாளர் வி.சுப்பு ராயன், மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர் ஆர்.அமர்நாத், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் ஆகியோர் உடனிருந்தனர்.