districts

img

2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நாசம் சிதம்பரம் கடைமடை பகுதி விவசாயிகள் வேதனை

சிதம்பரம், நவ. 3- சிதம்பரம் கடைமடை பகுதியில் கொள்ளிடம் ஆற்று வெள்ள நீர்  மற்றும் தற்போது பெய்யும் மழைநிரால்  2 ஆயிரம்  ஏக்கர் நெற்பயிர்கள், நாற் றாங்கால் நாசமாகியுள்ளது என விவ சாயிகள் வேதனை தெரிவித்த னர். காவிரி டெல்டா பகுதியின் கடை மடை பகுதி தெற்கு பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், உத்தம சோழ மங்கலம், கீழச்சாவடி, கிள்ளை, நஞ் சமகத்துவாழ்க்கை, கீழதிருக் கழிப்பாலை, மேலத்திருக்கழிப்பாலை, பிச்சாவரம், கனகரபட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள். இங்கு வயல்களில் தற்போது சம்பா நடவு, நாற்றங்கள் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிட்டுள்ளனர். கடலில் வடியாமல் பிச்சாவரம் சதுப்புநில காடு கள் வழியாக திரும்பியதால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் நடவு மற்றும்  நாற்றங்காலில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் மூழ்கியது. மறு பக்கத்தில், சிதம்பரம் பகுதி யில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீரும், கொள்ளிடம் தண்ணீரும் ஒன்றாக வயலில் தேங்கி  நிற்பதால் நாற்றங்கால் முழுவதுமாக அழுகிவிட்டது. மேலும் நடவுகள் நடப் பட்ட மிக குறுகிய நாட்களிலேயே நெற் பயிர் நீரில் மூழ்கி வீணாகியுள்ளது.  இதுகுறித்து கான்சாகிப் பாசன வாய்க்கால் சங்கத் தலைவர் கண்ணன்  கூறுகையில், “நாற்றங்கால் முழுவதும் அழுகிவிட்டதால் மாற்று வழியும் இல்லை. இதுகுறித்து சிதம்பரம் உதவி ஆட்சியர், வட்டாட்சியர், வேளாண் அலுவலர்களையும் நேரில் சந்தித்து மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை” என்று வேதனையை வெளிப்படுத்தினார். தற்போது பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் நவரை பருவத்திற்காவது விவசாயிகள் மகசூல் பெற அரசு தேவையான விதை  நெல், உரம், ஜிப்சம் உள்ளிட்ட வைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.