districts

img

ஏரிக்கரை ஓரம் இறைச்சிக் கழிவுகள்: தொற்று நோயால் பாதிக்கப்படும் மக்கள்

ஓசூர் செப். 25- ஓசூர் மாநகராட்சி 10ஆவது வார்டுக்குட்பட்ட வெங்கடேஷ் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு அருகே உள்ள அலசநத்தம் ஏரி கரையோரத்தில் பன்றி, கோழி மற்றும் மீன் இறைச்சிக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் பல இடங்களில் சாக்கடை யில் அடைப்பு ஏற்பாடு கழிவு நீர் தேங்கி நிற்பதாலும், தினசரி குப்பைகள் அள்ளப் படாமல் தேங்கிக் கிடப்ப தாலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய்கள் பரவி வருகிறது. காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பாதிப்புகளால் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கடுமை யாக பாதிக்கப்பட்டு வீடு களில் முடங்கியுள்ளனர். பாதிப்புக்குள்ளான பலர் ஒசூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இந்த பகுதியில் பரவி வரும் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும், கால்வாய் அடைப்புகளை சரி செய்து, தினசரி குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;