உதகை, ஜூன் 10- 4 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு வினரை காவல் துறையினர் கைது செய்தனர். 2024 பிப்ரவரி முதல் இன்று வரை மாத ஊதியம் வழங்காமல் இருக்கும் ‘பெக்ட் டே’ என்ற நிறுவனத்தின் நிர்வாகத்தை கண்டித் தும், இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உடனடியாக சம்பளத்தை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி நீலகிரி மாவட் டம், உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் போராட் டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஸ்டெர்லிங் பயோடெக் ஆலை ஊழியர் சங்கத் தலைவர் ஆபிரகாம் தலை மை வகித்தார். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் சங்கரலிங்கம், சுந்தரம், ராஜேந்தி ரன், மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதன்பின் மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் போராட்டத் தைத் தொடர்ந்த, சிஐடியு தலைமையில் அணிதிரண்ட 50க்கும் மேற்பட்ட தொழிலா ளர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.