உடுமலை, டிச.31- அமராவதி சைனிக் பள்ளியில் வருடாந்திர ஒருங்கி ணைந்த பயிற்சி முகாம் டிச.23 முதல் டிச.30 வரை நடை பெற்றது. இந்த பயிற்சி முகா மில் 199 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். மாணவர்களுக்கு துப்பாக்கி சூடுதல், அணிவகுப்பு பயிற்சி ,வரைபடப் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. டிச.29 ஆம் தேதி நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழ்நாடு தீய ணைப்பு துறை உடுமலை நிலைய அலுவலர் கோபால் தலைமையில் சைனி பள்ளி தேசிய மாணவர் படையினருக்கு தீயின் வகைகள் ,பாதுகாப்பு முறைகள், விழிப்புணர்வு முதலி யவற்றை செயல்முறை பயிற்சியுடன் செய்து காண்பித் தனர். அடுத்த நிகழ்வாக, பள்ளியின் மருத்துவர் ஆஷா நிர்மல் உடல் நலம், முதலுதவி, உடல் தூய்மை போன்றவற்றை காணொளியுடன் விளக்கினார். இதைதொடர்ந்து தமிழ் நாடு வனத்துறை அமராவதி நகர் வனசரக அலுவலர் சுரேஷ் தலைமையில் வனம் மற்றும் வன உயிரினங்கள் முக்கியத்து வம் பற்றி விளக்கினார். பயிற்சி முகாமில் இறுதி நிகழ் வாக வெள்ளியன்று கேம்ப் பையர் மற்றும் கலை நிகழ்ச்சிக ளுக்கு பள்ளியின் முதல்வர் கேப்டன் நிர்மல் ரகு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளியின் துணை முதல்வர் மற் றும் பள்ளி தேசிய மாணவர் படையின் கமெண்டிங் ஆபிசர் கமாண்டர் தீப்தி உபாத் யாயா ஆகியோர் தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது.