உடுமலை, டிச. 7- உடுமலைபேட்டை புத்தகத் திரு விழா சனியன்று கலை நிகழ்ச்சியுடன் சிறப்பாகத் தொடங்கியது.
உடுமலை புத்தகாலயம் - திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து உடு மலை தேஜாஸ் மஹாலில் பத்து நாட்கள் இந்த புத்தகத் திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளன. உடுமலை மத்திய பேருந்து நிலை யத்தில் முன்பு இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலை கிளை யின் கலைக்குழுவினரின் சிறப்பு கலை நிகழ்ச்சியுடன் துவங்கிய பேரணி புத்தகத் திருவிழா நடைபெறும் மண்டபத்திற்கு வந்தடைந்தனர்.
தொடக்க நிகழ்ச்சிக்கு புத்தகத் திரு விழா வரவேற்புக்குழுத் தலைவர் நாக ராஜ் தலைமை தாங்கினார், வரவேற்புக் குழு செயலாளர் சக்திவேல் வரவேற் றார். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப் பினர் ஈஸ்வரசாமி புத்தகத் திருவி ழாவை துவக்கி வைத்தார். உடுமலை நகர்மன்றத் தலைவர் மு.மத்தீன் முதல் புத்தக விற்பணையைப் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் உடுமலை புத்த காலயத்தின் சிறப்பு ஆலோசகர் ஆசிரி யர் ச.செல்லத்துரை, ஆடிட்டர் கந்த சாமி, மழை உடுமலையின் வர்ஷினி இளங்கோவன், பிங்கி ரெடிமேட்ஸ் எல். எம்.பாபு, நூலகர் வாசகர் வட்டத்தின் சண்முகசுந்தரம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டார்கள். நிறைவாக வர வேற்புக்குழு பொருளாளர் பால கிருஷ்ணன் நன்றி கூறினார்.