கோபி, ஜூன் 13- இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக் குள் புகுந்து சேதப்படுத்தும் வனவிலங் குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பெருமுகை கிராமத்திற்குட்பட்ட கரும் பாறை, கொளத்துக்காடு, சைபன்புதூர், ஏணி பில்லிதோட்டம், உள்ளிட்ட பகுதிகள் வனபகு தியையொட்டி அமைந்துள்ளது இப்பகுதி யில் உள்ள விவசாயிகள் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் கரும்பு மற் றும் வாழை அதிகளவில் சாகுபடி செய்துள்ள னர்.
இந்நிலையில், வனப்பகுதியிலிருந்து வெளியேறும் வனவிலங்குகள் சஞ்சீவிரா யன்குளத்திற்கு தண்ணீர் அருந்த வரும் வன விலங்குகள், நீர்வழி பாதையையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து கரும்பு மற்றும் வாழையை சேதப்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக கொளத்துக்காடு பகு தியில் கதிர்வேல், மாரசாமி, அசோக்குமார், குழந்தைவேல், பச்சியப்பன் ஆகியோர் பயிர டப்பட்ட 50 ஏக்கர் கரும்பு பயிர்கள் மற்றும் மசால் தீவனப்பயிர்களை சேதப்படுத்திள் ளது.
இது தொடர்ந்து கடந்த 10 நாட்களுக் கும் மேலாக இரவு நேரத்தில் யானைகள் விவ சாய தோட்டங்களில் உள்ளே புகுந்து பயிர் களை சேதப்படுத்தி வருகிறது. இதுகுறித்து அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தால், வனத்துறையினர் சம்பவ இடத் தில் சேதமான பயிர்கள் குறித்து விசாரணை மட்டுமே நடத்தி வருகின்றனர். வனவிலங்கு கள் வனப்பகுதியிலிருந்து வெளியேறமால் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர்.