ஈரோடு, ஜூன் 12- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போலீசார் வழக்கு பதிவு செய்வதில் மெத்தனம் காட்டிய நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி உள்ளிட்ட அமைப்புகள் தலையீடு செய்த நிலையில், குற்றவாளி போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் கடைக்கு சென்ற சிறுமியை கடைக்காரர் பூசாரி வெங்கட், பாலியல் வன்கொ டுமை செய்து மிரட்டியுள்ளார்.
இதுகு றித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி யடைந்த சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், புகாரை பெற்ற காவல்துறையினர் உரிய நடவ டிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக புகார் எழுந்தது. இதனைய டுத்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பா. லலிதா, தலைவர் பி.எஸ்.பிரசன்னா, கீதா ஆகியோர் பாதிக்கப்பட்டவர்க ளைச் சந்தித்து நடந்த விபரங்களைக் கேட்டறிந்தனர். அத்துடன் காவல் நிலை யம் சென்று முதல் தகவல் அறிக்கை யைக் கேட்டு பெற்றனர். இதனைய டுத்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்ட உதவிகள் செய்வதற்கான நடவடிக் கையை மேற்கொண்டனர்.
இதுகுறித்து பா.லலிதா கூறுகை யில், இவ்விவகாரத்தில், காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்வதில் மெத்த னம் காட்டினர். ஆண் துணையற்ற முறை சாரா தொழிலாளியான சிறுமியின் தாய் தான் வேலைக்குச் சென்றால் தான் 4 பேர் கொண்ட குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலையில், மறுநாளே வேலைக் குச் சென்று விட்டார். முதல் தகவல் அறிக்கை கூட கொடுக்கவில்லை. மாறாக சிறுமியின் கையெழுத்தை மட் டும் வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள் என காவல் துறையில் கேட்டுள்ளனர்.
நாம் தலையிட்ட பிறகும் இரவு 10.30 மணிக்கு தான் முதல் தகவல் அறிக்கை வழங்கினர். குற்றவாளியைக் கைது செய்யாமல் அவருக்கு உடல்நிலை சரி யில்லை, மருத்துவமனையில் உள்ளார் என சாக்கு போக்கு சொல்லி வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தலையிட்ட பிறகே குற்றவாளி போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார், என்றார்.