districts

ஈரோடு மாவட்டத்தில் குற்றச்செயல்கள் 50 சதவிகிதம் குறைந்துள்ளது

ஈரோடு, டிச.31- ஈரோடு மாவட்டத்தில் குற்றச்செயல்கள் 50 சதவீதம் குறைந்துள்ளதோடு, திருட்டு  வழக்குகளில் 76 சதவீதம் பொருள்கள் மீட்கப் பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது என மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் வி.சசிமோகன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஈரோடு மாவட்ட காவல்துறையின் செயல்பாடானது முந்தைய ஆண்டைவிட இந்தாண்டு மிகவும் சிறப்பாக உள்ளது. இந் தாண்டு பதிவான கொலை வழக்குகளில் 100 சதவீதம் குற்றவாளிகள் அடையாளம் காணப் பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்படுத்தப் பட்டுள்ளனர். குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டு 377 குற்ற வழக்கு கள் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 101  வாகனங்கள் மற்றும் 228 சவரன் நகைகள் உட்பட ரூ.2 கோடியே 24 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள களவு சொத்துக்கள் மீட்கப் பட்டுள்ளன. அதாவது 76 சதவீதம் களவு சொத்துகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 5,142 நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. இதில் லாட்டரி வழக்குகளில் 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தீவிர கஞ்சா தடுப்பு நடவடிக்கையின் மூலம் 244 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 396  நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமி ருந்து ரூ.23 லட்சத்து 93 ஆயிரம் மதிப்புள்ள 163 கிலோ கஞ்சா, 3,008 போதை மாத்திரை கள் மற்றும் 196 போதை சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  79 கஞ்சா குற்றவாளி களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள் ளன. தீவிர கஞ்சா தடுப்பு நடவடிக்கையின் மூலம் முந்தைய ஆண்டை காட்டிலும் 53 சத வீதம் அதிகப்படியான வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட் கள் விற்றதாக 419 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு 465 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 12,107 கிலோ  குட்கா  பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தோடு, 17 குற்றவாளிகளின் வங்கி கணக்கு கள் முடக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப் பட்டுள்ளது.