ஈரோடு மாவட்டத்தில் தீக்கதிர் சந்தா அளிப்பு நிகழ்வில் 294 சந்தாக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகத்திடம் ஈரோடு மாவட்ட தலைவர்கள் வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பரமசிவம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வீ.அமிர்தலிங்கம், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் மற்றும் ப.மாரிமுத்து உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.