இராமநாதபுரம்,பிப்.17- இராமநாதபுரம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க அமைப்புக் கூட்டம் பிப்ரவரி 17 அன்று லில்லி பாக்கியம் தலைமையில் நடை பெற்றது. ராதா வரவேற்றார். துவக்கி வைத்து மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ். எ.சந்தானம், கட்டு மான சங்க மாவட்ட தலைவர் ஆர்.வாசுதேவன், தனி யார் மோட்டார் வாகன சங்கச் செயலாளர் எஸ். ஆனந்த் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத் தலைவராக ராதா, செயலாளராக லில்லி பாக்கியம், பொருளாள ராக ஜாக்குலின், துணைத் தலைவராக வள்ளி, துணைச் செயலாளராக கனக வீரலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மக்களை தேடி மருத்துவ ஊழியர்களுக்கு டிசம்பர், ஜனவரி மாத நிலுவை சம்பளத்தை உடனடி யாக வழங்க வேண்டும். உபகரணம் பராமரிப்புக்கு நிர்வாகமே நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி நிறைவுரையாற்றினார். வள்ளி நன்றி கூறினார்.