districts

img

மின் பொறியாளர்- தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை உடனே வழங்கிடுக!

இராமநாதபுரம், மே 14- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) இராமநாதபுரம் மின் பகிர் மான வட்ட கிளை 32 ஆவது ஆண்டு பேரவை சனிக்கிழ மையன்று இராமநாதபுரத் தில் திட்டத் தலைவர் முரு கன் தலைமையில் நடைபெற் றது.   சேகர் கொடியேற்றினார். ஜெயமணி வரவேற்றார். சசி குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மண்டலச் செய லாளர் உமாநாத் துவக்க உரையாற்றினார். திட்ட செய லாளர் காசிநாதன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார்.  சிஐ டியு மாவட்ட தலைவர் அய்யா துரை மற்றும் மாவட்ட நிர்வாகி  கள் ஆர்.குருவேல், எஸ்.ஆர். ராஜன், சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் மாலா , எல்ஐசி நிர்வாகி முத்துப்பாண்டி மற்  றும் டி ராமச்சந்திர பாபு  ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். பேரவையில்  திட்டத் தலைவராக முருகன், செய லாளராக காசிநாதன், பொரு ளாளராக ரகுநாதன்,  மற்றும் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில பொதுச் செயலாளர் எஸ் ராஜேந்திரன் சிறப்புரை யாற்றினார்.  அவர் பேசுகை யில், 52 ஆயிரம்  காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண டும். மின் உற்பத்தியை அரசே ஏற்று நடத்த வேண்டும். மின் கொள்முதல் விலை தொடர் பாக மறு பரிசீலனை செய்திட வேண்டும் என்றார்.  மின் பொறியாளர் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். அது தொடர்பான பேச்சுவார்த்தையை உடனே  தொடங்க வேண்டும். பத் தாண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் .இதர தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.380 வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் பணி புரிந்து வரும் 9 613 கேங்மேன் பணியாளர் களுக்கு மருத்துவ விடுப்பு,  ஈட்டிய விடுப்பு வழங்க வேண்டும். ரூ. 15 ஆயிரம் மாத ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் .தொழிலா ளர்கள் நலன் கருதி தரமான  தளவாட சாமான்கள் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன சசி குமார் நன்றி கூறினார்.