அரியலூர், மார்ச் 13- அரியலூரில் மகளிர் தினத்தையொட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு நடை பெற்ற பேரணியை சிஐடியு மாவட்டச் செய லாளர் பி.துரைசாமி தொடங்கி வைத்தார். பேரணியானது, பிரதான சாலை வழியாக சென்று அண்ணா சிலை அருகே நிறை வடைந்தது. இதைத்தொடர்ந்து அண்ணா சிலை அருகே கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ். தேவமணி, மாதர் சங்க மாநிலச் செயலா ளர் வி.மேரி, அங்கன்வாடி மாநிலத் தலை வர் எஸ்.ரத்தினமாலா ஆகியோர் பங்கேற்று பேசினர். நிகழ்வில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சிற்றம்பலம், மாதர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வாலிபர், மாணவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங் கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்ட னர். கருத்தரங்கில் பெண்களுக்கு பணி யிடத்தில் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண் டும். நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரை களை செயல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம கூலி வழங்க வேண்டும். பெண்களுக்கான வேலைவாய்ப்பை அதி கப்படுத்த வேண்டும். பெண் சொத்துரிமை, தனி பெண்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.