அரியலூர் அண்ணா சிலை அருகே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி குடிநீரில் மனித மலம் கொட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.செல்வநம்பி தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் ச.திருமார்பன் கண்டன உரையாற்றினார்.