அரியலூர், ஏப்.5- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே செங்குந்தபுரம் கிராம குடியிருப்பு மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கை யெழுத்து இயக்கம் மற்றும் கோரிக்கை களை விளக்கி பிரச்சாரம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மூத்த தலைவர் பரம சிவம் தலைமை வகித்தார். ஒன்றியச் செய லாளர் வெங்கடாசலம் பேசினார். மாதர் சங்க உறுப்பினர் பத்மாவதி உள்ளிட்டோர் பேசினார். தொடர்ந்து ஆட்டோ மூலம் பிரச் சாரம் செய்து, வீடு வீடாக நேரில் சென்று குடியிருப்பு வாசிகள் மற்றும் பொது மக்களி டம் கையெழுத்து பெறப்பட்டது. இந்த இயக்கத்தில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் 1 வது வார்டு 11-வது வார்டு பகுதிகளில் புதிய குடியிருப்புகள் அதிகரித்து, விரிவடைந்து வருகிறது.
இவற்றுக்கு தற்போதுள்ள நீர்த்தேக்க தொட்டி மூலம் முழுமையாக குடிநீர் வழங்குவது சாத்தியமற்றது. இந்த ஆண்டு பருவமழை பொய்த்து ஏரி, குளம், குட்டை கிணறுகளில் நீர் வற்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது. கோடை காலத்தில் குடிநீர் பற்றாக் குறை ஏற்படும் சூழல் இருப்பதை கருத்தில் கொண்டு செங்குந்தபுரம் 1 வது வார்டு, 11 வது வார்டு குடியிருப்பு பகுதிகளின் குடி நீர் தேவையை நிரந்தரமாக பூர்த்தி செய்ய புதிதாக இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, இரண்டு லட்சம் லிட்டர் கொள்ள ளவில் 2 நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். மேலும், கொள்ளிடம் கூட்டுகுடி நீர் வழங்க புதிய நீர் உந்து நிலையம் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்குந்தபுரத்தில் பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ள சாலைகளை சீர மைத்து, புதிய தார்ச்சாலை அமைத்துத் தர வேண்டும். 3 வது தெருவிலிருந்து 8 வது தெரு வரை உள்ள வீதிகளுக்கு இடையில் உள்ள பாதையில், குப்பைகள் மண்டி பொதுமக்கள் நடக்க முடியாத அளவு மிக வும் மோசமாக உள்ளது. இதனை அப்பு றப்படுத்தி தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த மார்ச் 26 அன்று தொடங்கிய இந்த கையெ ழுத்து இயக்கம் ஏப்ரல் 3 அன்று முடி வுற்றது. கையெழுத்து பெறப்பட்ட மனுக்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் மூர்த்தி மற்றும் வட்டாட்சியர் துரையிடம் வழங்கப்பட்டது.