districts

img

ஜெயங்கொண்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

அரியலூர், மார்ச்.15- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே குடிநீர் வழங்கா ததைக் கண்டித்து, தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள்  காலிக் குடங்களுடன் முற்றுகை யிட்டனர்.  அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் சுமார் இரண்டா யிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தாபழூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட 8-ஆவது வார்டு தாதம்பேட்டை காம ராஜ் நகரில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் அதி காரிகள் நடவடிக்கையும் எடுக்க வில்லை எனத் தெரிகிறது. இந்த நிலை யில்  செவ்வாயன்று தன்னெழுச்சியாக திரண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாதம்பேட்டை கிளை செயலாளர் ஆர்.காமராஜ் தலைமை வகித்தார்.  மாவட்டச் செய லாளர் எம்.இளங்கோவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே மகாரா ஜன், ஒன்றிய செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பி னர் ஆர்.செந்தில், கிளைச் செயலா ளர் கே.பன்னீர்செல்வம், தா பழூர் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலா ளர் உத்திராபதி, வி.தொ.ச.ஒன்றிய துணைச் செயலாளர் காளிமுத்து  ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். பின்னர் ஊராட்சி அலுவல கத்திற்கு உள்ளே அமர்ந்து காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வார காலத்திற்குள் புதிய போர் அமைத்து குடிநீர் பிரச்சனை தீர்த்து வைப்பதாகவும், அதுவரை டேங்கர் மூலம்  குடிநீர்  வினியோ கிப்பதாகவும் உறுதியளித்தனர். மேலும் கூத்தங்குடி தொடக் கப்பள்ளியில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்களை அகற்றப்படும்.  தாதம்பேட்டை விளையாட்டு மைதா னத்தில் விளையாட்டு உபகரணங்ள் நிறுவப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.