அரியலூர், அக்.14 - பார்வையற்ற பெண்ணை பாலியல் வன் கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த சின்ன கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன் (30). இவர் பார்வை யற்ற 36 வயதுடைய பெண்ணை கடந்த ஏப் ரல் 2021 ஆம் ஆண்டு, அத்துமீறி அவரது வீட் டிற்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அப்பெண்ணின் உறவினர் ஜெயங்கொண்டம் அனைத்து மக ளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ராஜ்மோகனை கைது செய்தனர். இது குறித்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத் தில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், குற்ற வாளி ராஜ்மோகனுக்கு ஆயுள் சிறையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித் தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறி ஞர் ம.ராஜா ஆஜரானார்.