districts

ஆவணங்கள் இல்லாத ரூ.54 ஆயிரம் பறிமுதல்

அரியலூர், ஜன.31 - தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள வரதரா ஜன்பேட்டை பேரூராட்சியில் பறக்கும் படையி னர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்நிலையில் திங்களன்று வரதராஜன் பேட்டை நகர் எல்லைப்பகுதியில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டி ருந்த போது, ஆண்டிமடத்தில் இருந்து வரதரா ஜன் பேட்டை வழியாக வந்த ஒரு மோட்டார்  சைக்கிளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர் ஆண்டிமடம் பகுதியைச் சார்ந்த  கௌதமன் (22) வியாபாரி என்பதும், அவர்  உரிய ஆவணங்களின்றி ரூ.54,400 பணத்தை  எடுத்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.54, 400-ஐ பறிமுதல் செய்து ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அதிகாரிகள் உரிய ஆவணங்களை ஜெயங்கொண்டம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளு மாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.