அரியலூர், நவ.10- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி முன்பு அரசாணை எண் 152 ரத்து செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மாநக ராட்சி, நகராட்சி நிரந்தர பணியாளர்கள் எண்ணிக் கையை 90 சதவீதம் குறைத்து, தனியார் மூலம் ஒப்பந்தப் பணி மேற்கொள்ளும் அர சாணை எண் 152 ரத்து செய்ய வேண்டும், மாநகராட்சி நக ராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள் நலன் கருதி 50 வயதுக்கு மேற்பட்ட பணி யாளர்களை பணி மாறுதல் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், நகராட்சி அனைத்து பணியாளர் சங் கத்தினர் கலந்து கொண்ட னர்.