அரியலூர், நவ.23- அரியலூர் மாவட்டம் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி, முதல் நிலைக் காவலர் நதியா ஆகியோர் பங்கேற்று, மாணவர்களிடம், குழந்தை களுக்கு எதிரான வன்முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், குழந்தைகள் தங்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களி டம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ யாரேனும் தொந்தரவு கொடுத்தால் உடனடியாக பெற் றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இதைத்தவிர 1098, 181 அல்லது 100 உள்ளிட்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரி விக்க வேண்டும் என விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் ஆசிரி யர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.