districts

img

இலவச வீட்டு மனை கேட்டு ஆட்சியரிடம் மனு

அரியலூர், மார்ச் 6- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மக்கள் குறைக் கேட்புக் கூட்ட  முகாம் ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலை மையில் திங்களன்று நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 285 மனுக்களை பெற்ற ஆட்சியர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம் பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  இதில், உடையார்பாளையம், முக் குளம், கரடிக்குளம், கொம்பேடு, இளைய பெருமாள் நல்லூர் மற்றும் நெரிஞ்சிக் கோரை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இல வச வீட்டுமனைப் பட்டா கேட்டு ஆட்சி யரிடம் மனு அளித்தனர்.

;