அரியலூர், அக்.18 - அரியலூர் மாவட்டம் காட்டுப்பிரிங்கியம், அய்யாநகரைச் சேர்ந்தவர் விவசாயி ராஜாங்கம் (67). இவரது மனைவி பச்சை யம்மாள். இவர் பெரியநாகலூர் பாலக்கரை யில் உள்ள ஒரு விவசாயி நிலத்திற்கு கடலை பிரித்தெடுக்கும் பணிக்கு சென்ற, தனது மனைவி பச்சையம்மாளை இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது பெரியநாகலூர் பாலக்கரை பெட்ரோல் பங்க் அருகே அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் சென்றபோது, பின்னால் சிமெண்ட் ஆலையிலிருந்து சுண்ணாம்புக் கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்தை ஏற்ப டுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், லாரி கண்ணாடி களை உடைத்து, லாரிக்கு தீ வைக்க முயற்சித்தனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுத்தன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் துக்குச் வந்த அரியலூர் காவல் ஆய்வா ளர்கள் மற்றும் காவல்துறையினர் சடலத்தை மீட்க முயற்சித்தனர். ஆனால் பொது மக்கள் உடலை ஒப்படைக்க மறுத்து, லாரிகளை இவ்வழியே இயக்கக் கூடாது என வலியுறுத்தி சாலையில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரியலூர் ஆர்டிஓ, தாசில்தார் பொதுமக்களிடம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, இச்சம்ப வம் குறித்து புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிமெண்ட் ஆலை அதிகாரி கள், லாரி உரிமையாளர்கள் மற்றும் பாதிக்கப் பட்ட மக்கள் ஆகியோர் இடையே பேச்சு வார்த்தை நடத்துவது என்றும், பொதுமக்க ளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவ டிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதை யடுத்து பொதுமக்கள் இறந்தவரின் உடலை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சிமெண்ட் ஆலைகளுக்கு இயக்கப் படும் லாரிகளுக்கு தனி சாலை அமைக்க வலி யுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று சாலை மறியலில் ஈடுபட்ட னர். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துச் சென்றனர்.