அரியலூர், பிப்.2- திருச்சியில், சரக காவல் உயரதிகாரிகளுடனான குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட தா.பழூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் முதல் நிலை காவலர் வனிதா, செந்துறை காவல் நிலைய காவலர் செந்தில்முருகன், மீன்சுருட்டி காவல் நிலைய காவலர் பிரபாகரன் ஆகியோருக்கு சான்றிதழ்களை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், திருச்சி மத்திய மண்டல ஐஜி க.கார்த்தி கேயன், திருச்சி சரக டிஐஜி எ.சரவணசுந்தர், அரியலூர் மாவட்ட எஸ்பி கெ.பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.