districts

img

கோடாலி கருப்பூர் ஏழு கண் மதகு தடுப்பணையில் உடைப்பு விவசாய நிலங்களை சூழ்ந்த மழைநீர்; பொதுமக்கள் அச்சம்

அரியலூர், அக்.18 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் அருகே உள்ள கோடாலி கருப்பூர்  கிராமத்தில் ஏழு கண் மதகு உள்ளது.  இந்த மதகானது சிந்தாமணி வடிகால்  ஓடையாகும். இந்த மதகு உடையார் பாளையம், ஜெயங்கொண்ட பகுதியில்  பொழியக்கூடிய மழை நீர், கொள்ளி டத்தில் கலக்கக் கூடிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலே யர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுமார் நூறு ஆண்டுகள் பழமையானது.  இந்த தடுப்பணை மதகுகள் பழுத டைந்ததால் முன்னிட்டு, சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேட்டூர் அணையில் இருந்து வரும் உபரிநீர் கொள்ளிடம் கீழணை பகுதியில் சுமார் 2 லட்சம் கன  அடிக்கு மேல் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், ஏழு கண் மதகில் முதல் கதவணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால், தண்ணீர் வடிகால் வாய்க்கால் வழியாக நுழைந்து விவ சாய நிலங்களை சூழ்ந்துள்ளது. தற்போது அண்ணங்காரன்பேட்டை, கோடாலி கருப்பூர், உதயநத்தம் கிழக்கு,  கண்டியங்கொல்லை உள்ளிட்ட பகுதி களில், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள 25 நாட்கள் ஆன  சம்பா நடவு நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.  மேலும் இதனை சுற்றியுள்ள கிராமங்க ளும் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ள தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ள னர்.
தற்காலிக ஷட்டர் அமைக்கும் பணி தீவிரம்
கோடாலி கருப்பூர் கிராமத்தில் உள்ள ஏழு கண் மதகு தடுப்பணையில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக, அப்பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் வயல்வெளிகளில் வெள்ள நீர்  சூழ்ந்துள்ளது. இருப்பினும் வயல்வெ ளிக்குள் தொடர்ந்து நீர் வருகிறது. ஆற்றுவெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக குடியிருப்பு பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆற்று வெள்ளம் கிராமத்திற்குள் புகாத வகை யில், தற்காலிகமாக ஆர்.எஸ்.பதி மரங்களை கொண்டு, மதகு உடைந்த பகுதியில் வைத்து தற்காலிக ஷட்டர் அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. அண்ணங்காரன்பேட்டை கிராமத்தில்  உள்ள மக்களை தா.பழூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் முகாம் அமைத்து  தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்தற்காலிக ஷட்டர் அமைக்கும் பணி தீவிரம்  ளது. அண்ணங்காரன்பேட்டை பகுதி யில் உள்ள கால்நடைகளை பாதுகாப்பாக  வைத்திருக்கவும், கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளி முகாமிற்கு செல்ல வும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.