அரியலூர், அக்.6- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே உள்ள தழுதாழை மேடு ஊராட்சிக்குட்பட்ட மெய்காவல் புத்தூர் காமராஜர் நகர் பகுதிக்கு அடிப் படை வசதிகள் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிபிஎம் கிளைச் செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். பாலமுருகன் வரவேற்றார். செல்வம், அருள்செல்வி, பிரகாஷ், பிரேம் ஆகியோர் முன்னிலை வகித்த னர். போராட்டத்தில் சிபிஎம் ஜெயங் கொண்டம் ஒன்றியச் செயலாளர் எம். வெங்கடாஜலம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், கே. மகாராஜன், டி.அம்பிகா, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மீனா, பி.பத்மா வதி ஆகியோர் பேசினர். போராட்டத்தில், தழுதாழைமேடு ஊராட்சிக்குட்பட்ட காமராஜ் நகர் மக்க ளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மயா னத்துக்கு பாதை, மினி டேங்க், மின்சார வசதி, தண்ணீர் வசதி, மின் விளக்கு மற்றும் தார் சாலைகள் அமைத்து தர கோரியும், காமராஜ்நகர் இருபுறமும் வடிகால் வரத்து வாய்க்கால் அமைத்து தரக்கோரியும் , தழுதாழைமேடு ஊரா ட்சிக்குட்பட்ட மக்களுக்கு 100 நாள் வேலையை 200 நாளாக வழங்க கோரி யும், தழுதாழைமேடு ஊராட்சியில் பணிபுரியும் செயலாளர். கழிப்பிடம் தட்டுத் தருவதில் பணம் மோசடி செய்ததை விசாரணை செய்து நட வடிக்கை எடுக்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற் றது. உண்ணாவிரதப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கள் ஆர்.ரவி, பசுபதி, ரமேஷ் ராஜேந்தி ரன், ஆர்.ரவீந்திர், எம்.கோவிந்த ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 50-க்கும் மேற்பட்ட பெண் கள் உட்பட 100 -க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மீன் சுருட்டி காவல் துறையினர் மற்றும் ஜெயங்கொண்டம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனேசன், குண்ட வெளி வருவாய் ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட சில கோரிக்கைகளை ஒரு வார காலத்திற்குள் செய்து தருவ தாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.